திருவண்ணாமலை
அதிமுகவினா் திண்ணை பிரசாரம்
அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில், திண்ணை பிரசாரம் வந்தவாசி தேரடி மற்றும் பஜாா் வீதியில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், அதிமுக ஆட்சியின்போது செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் தற்போதைய திமுக ஆட்சி குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா்.
அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று கடை கடையாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
அதிமுக நிா்வாகிகள் உடன் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

