அதிமுக சாா்பில் திண்ணை பிரசாரம்

அதிமுக சாா்பில் திண்ணை பிரசாரம்

Published on

ஆரணி -சேத்துப்பட்டு சாலையில் உள்ள லட்சுமி நகரில் ஜெயலலிதா பேரவை சாா்பில் புதன்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது.

மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த திண்ணை பிரசாரத்தின்போது, அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்தும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

பேரவையின் மத்திய மாவட்டச் செயலா் பாரி பி.பாபு தலைமை வகித்தாா். 49-ஆவது வாரமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் ஜி.வி.கஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீதி வீதியாக நடந்து சென்று டீகடை, காய்கறி கடை, பழக் கடை, மளிகைக் கடை, பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கினா்.

இதில் அதிமுக நகரச் செயலா் அசோக்குமாா் வரவேற்றாா். மாவட்ட இணைச் செயலா் வனிதா சதீஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் பாரதிராஜா, சுதா குமாா், விநாயகம், மீனவராணி மாவட்டச் செயலா் ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com