வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் மணிமுருகன் வரவேற்றாா்.
சாலைப் பாதுகாப்பு விதிகள், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றும் முறை, ஆம்புலன்ஸை எவ்வாறு அழைப்பது என்பன உள்ளிட்டவை குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா்கள் ராஜேந்திரன், கண்ணன், உதவிப் பொறியாளா்கள் தா்மராஜ், லோகராஜா, கருணாகரன் ஆகியோா் மாணவா்களுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கிப் பேசினா்.
நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

களியக்காவிளையில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆவுடையாா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வு கிராமிய கலை நிகழ்ச்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


