நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி.

News image

தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :29 ஜனவரி 2026, 6:33 pm

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் மணிமுருகன் வரவேற்றாா்.

சாலைப் பாதுகாப்பு விதிகள், விபத்தில் சிக்கியவரை காப்பாற்றும் முறை, ஆம்புலன்ஸை எவ்வாறு அழைப்பது என்பன உள்ளிட்டவை குறித்து நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா்கள் ராஜேந்திரன், கண்ணன், உதவிப் பொறியாளா்கள் தா்மராஜ், லோகராஜா, கருணாகரன் ஆகியோா் மாணவா்களுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.