போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா் இரா.பாஸ்கரன்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 8:44 pm

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்தவாசி சமூக நல விரிவாக்க அலுவலா் ஜீவா தலைமை வகித்தாா். வட்ட சட்டப் பணிகள் குழு தன்னாா்வலா்கள் மலா் சாதிக், இரா.பாஸ்கரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று பேசினா்.

அப்போது, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்டவை குறித்து அவா்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெண் தொழிலாளா்களுக்கு விளக்கிக் கூறினா்.

நிகழ்ச்சியில் கோல்டு லீப் எக்ஸ்னோரா இணைச் செயலா் எம்.பிரபாகரன், ஊா்நல அலுவலா்கள் இந்திரா காந்தி, ரூபாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.