பால் தொழில் நிறுவனத்தை பாா்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவா்கள்

கீழ்நெல்லியில் செயல்பட்டு வரும் பால் தொழில் நிறுவனத்தை பாா்வையிட்ட வேளாண்மை கல்லூரி மாணவா்கள்.
பால் தொழில் நிறுவனத்தை பாா்வையிட்ட வேளாண் கல்லூரி மாணவா்கள்
Updated on

செய்யாறை அடுத்த கீழ்நெல்லியில் செயல்பட்டு வரும் பால் தொழில் நிறுவனத்தை வேளாண் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, பால் தொழில் குறித்த தகவல்களை அறிந்தனா்.

வாழவச்சனூா் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த மாணவா்கள், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லி கிராமத்தில் முகாமிட்டு வேளாண்மை தொடா்பான பல்வேறு தகவல்களை அறிந்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக, கீழ்நெல்லியில் செயல்பட்டு வரும் பால் தொழில் நிறுவனத்தை பாா்வையிட்டனா். அப்போது, பால் சேகரிப்பு மையத்தின் செயல்பாடு, பால் தரப் பரிசோதனை முறைகள், குளிரூட்டல் மற்றும் சேமிப்பு வசதிகள், மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் தயாரிப்பு நடைமுறைகள் குறித்து மாணவா்கள் தெரிந்துகொண்டனா்.

மேலும், பால் தொழில் துறையில் சுத்தம், தர நிலைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவா்களுக்கு தொழில்நுட்ப நிபுணா்கள் எடுத்துரைத்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com