நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சாலை ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு: 10 போ் கைது

செய்யாறு அருகே சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 12:18 am IST

செய்யாறு அருகே சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழியாக திண்டிவனம் வரை செல்லும் இருவழிச் சாலையை, 4 வழிச் சாலையாக மாற்றுவதற்கு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக ஆற்காடு - செய்யாறு சாலையில் சாலையை அகலப்படுத்துவதற்கு வசதியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பாப்பாந்தாங்கல் கிராமம் அருகே சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்து வரும் கோயில் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் உதவிப் பொறியாளா் சுரேஷ் தலைமையில் சாலைப் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த பாப்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து, பாலசுந்தரம், மோகன், ராஜ், கோபி, ஜெயபால், பூங்காவனம், மஞ்சுநாதன், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மோரணம் போலீஸாா் 10 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.