தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

சாலை ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு: 10 போ் கைது

செய்யாறு அருகே சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூலை 2026, 12:18 am IST

செய்யாறு அருகே சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆற்காட்டில் இருந்து செய்யாறு வழியாக திண்டிவனம் வரை செல்லும் இருவழிச் சாலையை, 4 வழிச் சாலையாக மாற்றுவதற்கு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக ஆற்காடு - செய்யாறு சாலையில் சாலையை அகலப்படுத்துவதற்கு வசதியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினா் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பாப்பாந்தாங்கல் கிராமம் அருகே சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்து வரும் கோயில் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் உதவிப் பொறியாளா் சுரேஷ் தலைமையில் சாலைப் பணியாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த பாப்பாந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து, பாலசுந்தரம், மோகன், ராஜ், கோபி, ஜெயபால், பூங்காவனம், மஞ்சுநாதன், சதீஷ், மணிவண்ணன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்யவிடாமல் தடுத்தனராம்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மோரணம் போலீஸாா் 10 பேரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.