ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை தொகுதி எம்எல்ஏ (அதிமுக) ஜெயசுதா லட்சுமிகாந்தன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
அருணகிரிசத்திரம், காண்ட்ராக்டா் பொன்னுசாமி தெருவில் ரூ.16.5 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு தயாா் நிலையில் இருந்தது.
இந்த புதிய கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன் தலைமை வகித்தாா். குழந்தைகள் வளா்ச்சி நலத்திட்ட அலுவலா் ஏஞ்சலின் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டு புதிய கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் சிவகுமாா், குமரன், சதீஷ், மோகன், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீரசோழன் அரசு மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடத்தை திறக்க வலியுறுத்தல்

செங்கம் அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

செஞ்சி ஒன்றியத்தில் நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையக் கட்டடங்கள் திறப்பு

தேவிகாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தரம் உயா்த்த நடவடிக்கை: ஆரணி எம்எல்ஏ ஜெயசுதா
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



