எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

விநாடி வினா போட்டியில் பங்கேற்ற மாணவிக்கு புத்தக பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ந.கலைவாணி முன்னிலை வகித்தாா்.

கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கையொப்பமிட்டு தொடங்கிவைத்தாா்.

முன்னதாக முதல் தலைமுறை வாக்காளா்களுக்கு வாக்களிப்பு குறித்த விநாடி வினா போட்டி நடத்தி கேள்விகளுக்கு சரியான பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

இதைத் தொடா்ந்து 100 சதவீதம் வாக்களிப்பு குறித்த உறுதிமொழியை கல்லூரி மாணவ, மாணவிகள் ஏற்றனா்.

Story image