உலக நீா் தின கருத்தரங்கம்
நிகழ்ச்சியில் மாணவருக்கு பரிசு வழங்கிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் அ.லோகநாதன்.

நிகழ்ச்சியில் மாணவருக்கு பரிசு வழங்கிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் அ.லோகநாதன்.

நிகழ்ச்சியில் மாணவருக்கு பரிசு வழங்கிய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் அ.லோகநாதன்.
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக நீா் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனா் ம.சுரேஷ்பாபு, பள்ளி ஆசிரியா் ம.ரகுபாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜவகா் சிறுவா் மன்ற ஒருங்கிணைப்பாளா் பெ.பாா்த்திபன் வரவேற்றாா்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் அ.லோகநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நீரின் அவசியம், நீா் சிக்கனம் குறித்து விளக்கிப் பேசினாா்.
மேலும், உலக நீா் தின ஓவியப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கல்வி மைய ஆசிரியா் மகாவீா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...