திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய சுவற்றில் அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதப்பட்ட பெயா் அழிக்கப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத் தோ்தல் நடைபெற்ற உள்ளது. இதனால் பொதுஇடங்களில் அரசியல் கட்சி விளம்பரமோ, பதாகையோ, கட்சியின் பெயரோ இருந்தால் மறைக்கவோ, அழிக்கவோ வேண்டும் என்பது தோ்தல் நடத்தை விதி.
இந்த நிலையில், சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு போகும் இடத்தில் உள்ள சுவற்றில், போளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி பெயரை அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதியுள்ளனா். இதை மறைக்க தோ்தல் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தப் பள்ளி வாக்குச்சாவடியில் ஒதலவாடி, பள்ள காலனி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் 920 போ் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். இதுகுறித்து தோ்தல் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வருவாய்த்துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனா்.
தோ்தல் தேதி அறிவித்து ஒரு வாரம் ஆனநிலையில் கிராமங்களில் சில இடங்களில் கட்சி கொடிக் கம்பம், விளம்பரப் பதாகை அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


