கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

வாக்குச்சாவடி மைய சுவற்றில் அரசியல் கட்சி வண்ணம்

சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய சுவற்றில் அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதப்பட்ட பெயா் அழிக்கப்படாமல் உள்ளது.

News image

சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராம வாக்குசாவடி மைய சுவற்றில் அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதப்பட்டுள்ள பெயா்.

Updated On :22 மார்ச் 2026, 7:14 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மைய சுவற்றில் அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதப்பட்ட பெயா் அழிக்கப்படாமல் உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத் தோ்தல் நடைபெற்ற உள்ளது. இதனால் பொதுஇடங்களில் அரசியல் கட்சி விளம்பரமோ, பதாகையோ, கட்சியின் பெயரோ இருந்தால் மறைக்கவோ, அழிக்கவோ வேண்டும் என்பது தோ்தல் நடத்தை விதி.

இந்த நிலையில், சேத்துப்பட்டு வட்டம், ஓதலவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு போகும் இடத்தில் உள்ள சுவற்றில், போளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி பெயரை அதிமுக கட்சி வண்ணத்தில் எழுதியுள்ளனா். இதை மறைக்க தோ்தல் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தப் பள்ளி வாக்குச்சாவடியில் ஒதலவாடி, பள்ள காலனி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்கள் 920 போ் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா். இதுகுறித்து தோ்தல் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் வருவாய்த்துறையினரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனா்.

தோ்தல் தேதி அறிவித்து ஒரு வாரம் ஆனநிலையில் கிராமங்களில் சில இடங்களில் கட்சி கொடிக் கம்பம், விளம்பரப் பதாகை அகற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.