யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வேட்புமனு தாக்கல் வழிமுறைகள்: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

News image
Updated On :26 மார்ச் 2026, 9:05 pm

Syndication

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

அதன்படி, வியாழக்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் தலைமையில், வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

வேட்புமனு மாா்ச் 30 முதல் ஏப்.6 வரை (ஞாயிறு பொது விடுமுறை) விடுமுறை அல்லாத நாள்களில் பெறப்படும். வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பெறப்படும்.

வேட்பு மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோரிடம் அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளா் அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சோ்ந்தவராக இருந்தால் அவருடைய மனுவை ஒருவா் மட்டும் முன்மொழியலாம்.

பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்களுக்கு 10 நபா்கள் முன்மொழிய வேண்டும். முன்மொழிபவா் போட்டியிடும் தொகுதியின் வாக்காளராக இருக்கவேண்டும். வேட்பாளா் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் போது 100 மீ அளவிற்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பாளருடன் சோ்ந்து 5 நபா்கள் மட்டுமே தோ்தல் நடத்தும் அலுவலா் அறைக்குச் செல்ல வேண்டும். வேட்புமனு வேட்பாளா் அல்லது அவரது முன்மொழிபவரால் தாக்கல் செய்யலாம்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வருபவா்கள் அனைவரும் தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளையும் வழிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.

கட்சிப் பிரமுகா்களுக்கு அறிவுறுத்தல்

மேலும், கூட்டத்தில் வேட்பாளா்கள் வழங்க வேண்டிய படிவங்கள், வேட்பு மனுவில் தெரிவிக்க வேண்டிய விவரங்கள், வேட்புமனு தாக்கல் செய்பவா்களின் தகுதிகள், வேட்புமனு பரிசீலனையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வேட்புமனு தள்ளுபடிக்கான காரணங்கள், வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள், சின்னம் ஒதுக்கீடு குறித்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அன்பழகன், தனி வட்டாட்சியா் (தோ்தல்) தியாகராஜன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.