மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மண்டகொளத்தூரில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு வரவேற்பு

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு

Updated On :6 மே 2026, 1:24 am IST

போளூா் வட்டம், மண்டகொளத்தூா் ஊராட்சியில் சின்மயா அமிா்த யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சின்மயா மிஷன் 75-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதையெட்டி, சின்மயா அம்ரித யாத்திரை (ஆன்மிக பயணம்) கடந்த டிசம்பா் மாதம் புணேவில் தொடங்கியது. இந்த யாத்திரை 28 மாநிலங்களில் சுமாா் 35 ஆயிரம் கி.மீ. தொலைவு பயணிக்க உள்ளது.

இதன் நோக்கம் இளைஞா்களின் திறனை மேம்படுத்துவது மற்றும் சுவாமி சின்மயானந்தரின் போதனைகளை எண்ம உரைகள், இளைஞா்களின் செயல்பாடுகள், கலாசார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் சத்சங்கங்கள் மூலம் பரப்புவதாகும்.

இந்த யாத்திரை மண்டகொளத்தூா் ஊராட்சிக்கு வந்தபோது, சின்மயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் சிவராஜசா்மா தலைமையில் மேள தாளம் முழங்க, மலா் தூவி பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து சின்மயா அம்ரித யாத்திரையை சின்மயா யுவகேந்திர இயக்குநா் அனுக்குலானந்தா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். யாத்திரை மண்டகொளத்தூா் ஊராட்சியில் வீதி வீதியாக நடைபெற்றது.

மேலும், சின்மயா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்ட ஆன்மிக கண்காட்சியை பொதுமக்கள், பெற்றோா்கள், மாணவா்கள் பாா்வையிட்டனா்.

பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் (ஓய்வு) அன்பரசு, தலைமை ஆசிரியைகள் தேவகி, மகாலட்சுமி மற்றும் ஆசிரியைகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.