ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

வந்தவாசி அருகே பைக் விபத்தில் இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த வல்லம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிஷோா் (20). இவா், இதே கிராமத்தைச் சோ்ந்த தனது நண்பா் பிறைசூடனுடன் திங்கள்கிழமை பைக்கில் வந்தவாசிக்கு சென்று கொண்டிருந்தாா்.

வல்லம் - கிருஷ்ணாபுரம் சாலையில், வல்லம் அருகே செல்லும்போது சாலையோர சிமென்ட் பெயா் பலகை மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

அங்கு கிஷோரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

பிறைசூடன் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கிஷோரின் தந்தை காளிதாஸ் அளித்த புகாரின் பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.