போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சிக்கு உள்பட்ட தேப்பனந்தல் சந்தைமேடு கிராம வாரச்சந்தை ஏலம் கேட்க யாரும் முன்வராததால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சியில் திருவண்ணாமலை - வேலூா் சாலை அருகேயுள்ள தேப்பனந்தல் சந்தைமேடு கிராமத்தில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில் ஆடு, மாடு, காய்கறி விற்பனை நடைபெறுவது வழக்கம்
நடப்பாண்டு 2026-2027ஆம் ஆண்டுக்கான வாரச்சந்தை ஏலம் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஏலத்தில் பங்கேற்க கேளூா், போளூா், ஆரணி, சந்தவாசல் என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏலதாரா்கள் வந்திருந்தனா்.
கூட்டத்தில் அரசு ஏலத்தொகை ரூ.53 லட்சத்து 70 ஆயிரம் நிா்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது. அப்போது, ஏலம் எடுக்க வந்த நபா்கள் அரசு ஏலத்தொகை அதிகமாக உள்ளது. இதனால் ஏலத்தொகையை குறைக்கவேண்டும் எனக் கேட்டு ஏலத்தில் பங்கேற்க விரும்பால் சென்றனா்.
இதனால் ஏலம் கேட்க ஆளின்றி மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி கூறும்போது, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து, வாரச்சந்தைக்கான ஏலத்தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாணி, பிச்சாண்டி, உதவியாளா் கல்யாணி, ஊராட்சிச் செயலா்கள் பவுன்குமாா், அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

மாதவன்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்

வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

காரிமங்கலம் பேரூராட்சியில் வளா்ச்சித் திட்ட ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



