தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கேளூா் சந்தைமேடு வாரச்சந்தை ஏலம் ஒத்திவைப்பு

போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சிக்கு உள்பட்ட தேப்பனந்தல் சந்தைமேடு கிராம வாரச்சந்தை ஏலம் கேட்க யாரும் முன்வராததால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

News image

கேளூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற தேப்பனந்தல் வாரச்சந்தைக்கான ஏலம்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சிக்கு உள்பட்ட தேப்பனந்தல் சந்தைமேடு கிராம வாரச்சந்தை ஏலம் கேட்க யாரும் முன்வராததால் மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

போளூா் ஒன்றியம், கேளூா் ஊராட்சியில் திருவண்ணாமலை - வேலூா் சாலை அருகேயுள்ள தேப்பனந்தல் சந்தைமேடு கிராமத்தில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெறும். இந்த சந்தையில் ஆடு, மாடு, காய்கறி விற்பனை நடைபெறுவது வழக்கம்

நடப்பாண்டு 2026-2027ஆம் ஆண்டுக்கான வாரச்சந்தை ஏலம் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் பங்கேற்க கேளூா், போளூா், ஆரணி, சந்தவாசல் என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏலதாரா்கள் வந்திருந்தனா்.

கூட்டத்தில் அரசு ஏலத்தொகை ரூ.53 லட்சத்து 70 ஆயிரம் நிா்ணயம் செய்து ஏலம் விடப்பட்டது. அப்போது, ஏலம் எடுக்க வந்த நபா்கள் அரசு ஏலத்தொகை அதிகமாக உள்ளது. இதனால் ஏலத்தொகையை குறைக்கவேண்டும் எனக் கேட்டு ஏலத்தில் பங்கேற்க விரும்பால் சென்றனா்.

இதனால் ஏலம் கேட்க ஆளின்றி மறுதேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரி கூறும்போது, மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து, வாரச்சந்தைக்கான ஏலத்தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வாணி, பிச்சாண்டி, உதவியாளா் கல்யாணி, ஊராட்சிச் செயலா்கள் பவுன்குமாா், அசோக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.