போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசாணை வெளியிட்டு பல ஆண்டுகளாகியும் தரம் உயர்வுக்குக் காத்திருக்கும் நூலகங்கள்!

வேலூர், மே 30: தமிழக அரசு அரசாணை வெளியிட்டுப் பல ஆண்டுகளாகியும், பல நூலகங்கள் தரம் உயர்த்தப்படாமல் உள்ளன.  மேலும், தொழில்நுட்பப் பணியாளர்கள் என அறிவித்து 12 ஆண்டுகளாகியும், அதை நடைமுறைப

Updated On :20 செப்டம்பர் 2012, 2:46 pm

வேலூர், மே 30: தமிழக அரசு அரசாணை வெளியிட்டுப் பல ஆண்டுகளாகியும், பல நூலகங்கள் தரம் உயர்த்தப்படாமல் உள்ளன.

 மேலும், தொழில்நுட்பப் பணியாளர்கள் என அறிவித்து 12 ஆண்டுகளாகியும், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு அக்கறை காட்டாததால் நூலகர்களிடையே மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழகத்தில் முதல்நிலை நூலகங்கள் 30, 2-ம், 3-ம் நிலை நூலகங்கள் 1,567, ஊர்ப்புற நூலகங்கள் 1,492, பகுதி நேர நூலகங்கள் 653 மற்றும் மொபைல் நூலகங்கள் உள்பட மொத்தம் 3,755 நூலகங்கள் இருப்பதாக அரசின் 2007-ம் ஆண்டின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

 மாவட்ட மைய நூலகத்தில் முதுநிலை நூலகரும், தாலுகா தலைமையக நூலகங்களில் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நூலகர்களும், கிராமப் பகுதிகளில் பகுதி நேர நூலகர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோரும் உள்ளனர். இதில் மாவட்ட நூலகருக்கும் சரி, ஊர்ப்புற நூலகருக்கும் சரி, பிளஸ் 2 மற்றும் சிஎல்ஐஎஸ் (நூலகத் தகவல் அறிவியல் சான்றிதழ் படிப்பு) முடித்திருந்தால், அவற்றை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு பணியில் நியமிக்கப்படுகின்றனர்.

 ஆனால், இவர்களுக்கு எஸ்எஸ்எல்சி சான்றிதழை அடிப்படையாகக் கொண்டே, அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. பிளஸ் 2, சிஎல்ஐஎஸ் முடித்தது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

 இதையொட்டி, தங்களைத் தொழில்நுட்பப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென்ற இவர்களது நீண்ட நாள் கோரிக்கை, 1997-ல் நிறைவேறியது. இதையொட்டி, எ.ஞ.(1ஈ) சர்.2. நஸ்ரீட்ர்ர்ப் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் (ஓ2) ஈங்ல்ஹழ்ற்ம்ங்ய்ற் ஈஹற்ங்க் 05.02.1997-ன் மூலம் பொது நூலகத்துறையில் பணியாற்றும் நூலகர்களைத் தொழில்நுட்பப் பணியாளர்களாக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான அடிப்படை ஊதியம் வழங்கப்படவில்லை.

 அரசு உத்தரவு வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. அது அமலுக்கு வந்தால், தற்போது ரூ.3,200 ஆக உள்ள அடிப்படை ஊதியம் ரூ.4.500 ஆக உயரும். இந் நிலையில், தமிழக அரசு தற்போது அறிவிக்கவுள்ள 7-வது ஊதியக் குழுப் பரிந்துரையிலும் இதற்கான அறிவிப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் நூலகர்கள்.

 தரம் உயராத நூலகங்கள்: குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை, வாசகர்களைக் கொண்டிருக்கும் நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்காக எர்.ம்ள்.ய்ர்.1408/உஈச (ந்) ஈஹற்ங்க் 25.07.1980 - ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்திலும், பிறகு மாவட்டத் தலைநகரங்கள் புதிதாக உருவாக்கப்படும்போதும் பல நூலகங்கள் மைய நூலகங்களாக தரம் உயர்த்தப்பட்டன.

 ஆண்டுக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவற்றை முதல் நிலை நூலகமாகவும், ஆண்டுக்கு 8 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 12 ஆயிரம் வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவை 2-ம் நிலை நூலகங்களாகவும் அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பல நூலகங்கள் தரம் உயர்த்தப்படாமலேயே இன்றளவும் செயல்படுகின்றன.

 தாலுகா தலைநகரங்களில் செயல்படும் 2 மற்றும் 3-ம் நிலை நூலகங்களை முதல் நிலை நூலகங்களாகத் தரம் உயர்த்துவதன் மூலம் புத்தகங்களும் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும்.

 மக்களும் நீண்ட தூரம் பயணித்து தற்போதுள்ள மாவட்ட மைய நூலகத்துக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது.

 தரம் உயர்த்துவதன் மூலம் கூடுதல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, புதிதாக நூலகர்கள் நியமிக்கப்படுவதும், பல ஆண்டுகளாகப் பணியாற்றும் நூலகர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும் பணிகளும் தடையின்றி நிகழும்.

 இதுபோன்ற ஏற்பாடுகள் இல்லாததால், நூலகங்களும் பின்தங்கியுள்ளன. நூலகர்களும் பதவி உயர்வின்றி பின்தங்கியே உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.