வேன் கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்

மாதனூர் அருகே காலணி தொழிற்சாலை வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.
Updated on
1 min read

மாதனூர் அருகே காலணி தொழிற்சாலை வேன் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் வியாழக்கிழமை காயமடைந்தனர்.
மாதனூர் அருகே பாலாண்டிபட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் தனியார் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் வியாழக்கிழமை மாலை பணிமுடிந்து தொழிற்சாலையின் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து அணுகுச் சாலைக்கு திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து வேன் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கியவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற ஆம்பூர் கிராமிய போலீஸார், கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com