மாணவருக்கு கத்திக் குத்து: 3 பேர் கைது

சோளிங்கர் அருகே மாணவனைக் கத்தியால் குத்தியதாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
Updated on
1 min read

சோளிங்கர் அருகே மாணவனைக் கத்தியால் குத்தியதாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
சோளிங்கர் பாறைமேடு பகுதியைச் சேர்ந்த ராணியின் மகன் சரவணன் (15). 10-ஆம் வகுப்பு படித்துள்ளார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷுடன் (22) கோலி விளையாடியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சரவணனிடம் சுபாஷ், அவரது நண்பர்கள் பாண்டியன் (26), கஜேந்திரன் (23), ரமேஷ் (23) ஆகியோர் செவ்வாய்க்கிழமை தகராறு செய்ததாகத் தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சுபாஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சரவணன் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  
இதுகுறித்து சரவணனின் தாய் ராணி சோளிங்கர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சோளிங்கர் போலீஸார் வழக்குப் பதிந்து, பாண்டியன், கஜேந்திரன், ரமேஷ் ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக சுபாஷை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com