தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வாக்குச்சாவடி மையங்களில் வட்டாட்சியர் ஆய்வு

ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :9 ஜூலை 2018, 12:03 am

ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
ஆம்பூர் வட்டம், வெங்கடசமுத்திரம், மிட்டாளம் ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வசதிகள், அங்கு பராமரிப்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருவாய்த் துறை பணியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைமை நில அளவையர் சேகர், தேர்தல் பிரிவு உதவியாளர் கண்ணன், துத்திப்பட்டு வருவாய் அலுவலர் வேல்முருகன்,  தேர்தல் பிரிவைச் சேர்ந்த பிரபுகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திர பிரசாத், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் முருகேசன், ராஜக்கிளி, பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.