சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு

ஆம்பூர் அருகே கிராமத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.

Updated On :24 ஜூலை 2018, 12:30 am IST

ஆம்பூர் அருகே கிராமத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.
மிட்டாளம் ஊராட்சி மேல்கூர்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸின்  நிலத்தில் சுமார் 8 அடி நீள  மலைப்பாம்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனவர் கருணாமூர்த்தி, வனக் காப்பாளர் முனிசாமி, வனக்காவலர் லட்சுமணன் ஆகியோரும், பொதுமக்களும் அந்தப் பாம்பை பிடித்தனர். பின்னர், அதனை சங்கராபுரம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.