வாணியம்பாடியில் வாக்கு சேகரித்த அமைச்சர்

வாணியம்பாடியில் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மாநில
Updated on
1 min read

வாணியம்பாடியில் வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து மாநில தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார். 
வாணியம்பாடியில் அதிமுக கூட்டணி சார்பில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக் கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் பேரணியாக பேருந்து நிலையம், காதர்பேட்டை, கச்சேரி சாலை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தனர். 
பேரணியின்போது அமைச்சர் நிலோபர் கபீல், வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பொதுமக்களிடையே பிரசாரம் செய்தனர்.  அதிமுக நகரச் செயலர் சதாசிவம், அவைத் தலைவர் சுபான், மாவட்டப் பிரதிநிதி பிரகாசம், ஒன்றிய பேரவைச் செயலர் சதீஷ், தேமுதிக, பாமக, பாஜக, கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com