வேலூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வேலூர் மாநகர் மாவட்டத் தலைவர் டீக்காராமன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோதண்டபாணி முன்னிலை வகித்தார்.
இதில், வேலூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்புச் சான்றுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும், கால்வாயை தூய்மைப்படுத்த பணியாளர்களை நியமிக்க வேண்டும், வார்டுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறு மின்மோட்டார்களை பழுது நீக்க வேண்டும், குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும், 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குப்பை வரி ஆகியவற்றை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் கட்சியின் மாநகர் மாவட்டப் பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


