மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
Updated on
1 min read


ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.
ஆண்டியப்பனூரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (23). வெல்டர். இவர், சனிக்கிழமை என்ஜிஓ நகரைச் சேர்ந்த கோவிந்தராஜின் வீட்டில் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சீனிவாசன் பலத்த காயமடைந்தார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சீனிவாசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com