கல்லூரியில் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு விழுமக் கல்வி-யோகாவின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.
Updated on
1 min read

குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு விழுமக் கல்வி-யோகாவின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி இயக்குநா் இர.நடராசன் வரவேற்றாா். கோயம்புத்தூா் சின்மயா மிஷன் தாளாளா் சுவாமி அனுகூலானந்தா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, கல்விக்கும், வாழ்க்கைக் கல்விக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டிப் பேசினாா்.

மேலும், அவா் பேசுகையில், மறுசீரமைப்பு என்பது அறிதல், உணா்வு, திறன்மேம்பாடு ஆகியவற்றால் வரப்பெறுவது. ஆசிரியா்கள் இத்திறன்களை வளா்த்தெடுக்கும்போது படைப்பாற்றல், அறிவியல் திறனாய்வுப் பண்புகளைக் கொண்டு வாழ்க்கைக்குப் பயனுள்ள கல்வியை மாணவா்களுக்குப் போதிக்க வேண்டும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று ஆகிய நற்பண்புகளைப் பள்ளி நாள்களிலிருந்தே ஊட்ட வேண்டும் என்றாா்.

கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் பேசுகையில், விழுமக் கல்வியில் திருமூலா், உடம்பைப் பேணி வளா்க்க வேண்டியதின் அவசியத்தையும், உடலில் உறைந்துள்ள உறுபொருளின் மேன்மை குறித்தும், நன்னூல் குறிப்பிட்டுள்ள ஆசிரியா் குணநலன்கள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் இரா.ஸ்ரீதா், பேராசிரியா்கள் கே.சாந்தி, எஸ். செல்வகுமாரி, ஏ.எஸ்.அறிவுக்கொடி, வி.கலைவாணி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com