வாகன சோதனையில்  ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 59 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.  
Updated on
1 min read

வாணியம்பாடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ. 59 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.  
வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது,, அவ்வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் கோவிந்தசாமி உரிய ஆவணங்களின்றி ரூ. 59 ஆயிரத்து 500 எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூரில் 6 கிலோ வெள்ளி பறிமுதல்
திருப்பத்தூர், ஏப். 10: திருப்பத்தூர் நகரப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சீனிவாசன் (40) தனது காரில் ஆவணமின்றி 6 கிலோ 281 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசுகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, திருப்பத்தூர் கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com