பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் "பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்' என்ற ஆங்கில எழுத்துக்களின் வடிவில் அமர்ந்து வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் கே. தேன்மொழி, முதல்வர் எம்.ஆர். மணி, ஆசிரியைகள் அம்சவேணி, வைதேகி, ஆனந்தி, ரேவதி ஆகியோர் செய்திருந்தனர்.