ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி
By DIN | Published On : 14th June 2019 06:40 AM | Last Updated : 14th June 2019 06:40 AM | அ+அ அ- |

ஜோலார்பேட்டை அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
கலந்திரா பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பையன் (60). கூலித் தொழிலாளி. இவர் கலந்தராவிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ஆட்டோவில் பயணம் செய்தார். பொன்னேரி அருகே உள்ள முதலைமேடு என்ற இடத்தில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோர் இறங்கியதால் சின்னபையன் நிலை தடுமாறி கீழே விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.