ஆற்காட்டில் தொழிலாளியைத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு கோட்டை மேட்டு தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22). இவருக்கும், ஆற்காடு மேனேஜர் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜிக்கும் செவ்வாய்க்கிழமை இரவு சாமி ஊர்வலத்தின்போது, தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த விக்னேஷ் ராஜியை மதுபாட்டிலால் கழுத்தை அறுத்தாராம். பலத்த காயமடைந்த ராஜி, ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஆற்காடு நகர போலீஸார் வழக்குப் பதிந்து விக்னேஷை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.