ரௌடி கழுத்து அறுத்துக் கொலை
By DIN | Published On : 28th March 2019 06:09 AM | Last Updated : 28th March 2019 06:09 AM | அ+அ அ- |

வேலூரில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரௌடி, மர்ம நபர்களால் புதன்கிழமை கழுத்து அறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
வேலூர் அருகே சேண்பாக்கம், காமராஜ் நகரைச் சேர்ந்த பழனியின் மகன் சத்தியா (38). திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர் மீது வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவை யில் உள்ளன.
இந்நிலையில், அவரது வீட்டருகே சத்தியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் அங்கு சென்று சத்தியாவின் சடலத்தை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அவரை கொலை செய்த நபர்களைத் தேடி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...