வாக்குப் பதிவு விழிப்புணர்வு: வண்ணக் கோலமிட்ட பள்ளி மாணவிகள்
By DIN | Published On : 28th March 2019 02:53 AM | Last Updated : 28th March 2019 02:53 AM | அ+அ அ- |

ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு வண்ணக் கோலமிட்ட மாணவிகள்.
நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி ஆம்பூர் நகராட்சிப் பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை வண்ணக் கோலமிட்டனர்.
ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி, 8-ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளி வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு வண்ணக் கோலமிட்டனர். அதை அப்பகுதி மக்கள் பார்த்துச் சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...