அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு இன்று விடுமுறை
By DIN | Published On : 15th May 2019 07:07 AM | Last Updated : 15th May 2019 07:07 AM | அ+அ அ- |

குடியாத்தம் கெங்ககையம்மன் கோயில் சிரசுத் திருவிழாவை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்துக்கு புதன்கிழமை (மே 15)
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாலாஜா பேட்டை வட்டம், அம்மூர் பேரூராட்சியில் கடந்த 36 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு புதன்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என்பதால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல், ராகி உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விற்பனைக்காக கொண்டுவர வேண்டாம் எனவும், தொடர்ந்து வியாழக்கிழமை (மே 16) வழக்கம் போல் செயல்படும் எனவும் அம்மூர் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் பழனி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.