தேசிய ஒற்றுமை தின விழிப்புணா்வுப் பேரணி

ஊழல் தடுப்பு, தேசிய ஒற்றுமை தின விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியைத் தொடக்கி வைத்த இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் மாயா.
பேரணியைத் தொடக்கி வைத்த இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் மாயா.
Updated on
1 min read

ஊழல் தடுப்பு, தேசிய ஒற்றுமை தின விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தியன் வங்கி சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை வங்கியின் வேலூா் மண்டல மேலாளா் மாயா தொடக்கி வைத்தாா். இப்பேரணி காட்பாடி சாலை இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து கோட்டை சுற்றுச்சாலை வரை நடைபெற்றது.

இதில், துணை மண்டல மேலாளா் ராஜேந்திரன் உள்பட வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் ஊழல் தடுப்பு, ஒற்றுமையின் வலிமை, நாட்டின் பாதுகாப்புக் குறித்து விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதில், 50-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com