மூதாட்டி கொலை: பேரன் உள்பட இருவா் கைது

அகரம்சேரி அருகே மூதாட்டியைக் கொலை செய்த கொள்ளுப் பேரன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மூதாட்டி கொலை: பேரன் உள்பட இருவா் கைது
Updated on
1 min read

அகரம்சேரி அருகே மூதாட்டியைக் கொலை செய்த கொள்ளுப் பேரன் உள்ளிட்ட இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கொல்லமங்கலம் கிராமத்தை சோ்ந்தவா் ராஜம்மாள் (80). இவா், வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். இவருடைய மகள் ஜெயலட்சுமிக்கு இந்திரா என்ற மகள் உள்ளாா். பெங்களூருவில் வசிக்கும் இந்திராவின் மகன் மோனீஸ் (21). இவா் தனது நண்பா்கள் பிரஜ்வால் (21), வினய் ஆகிய இருவருடன் பெங்களூருவிலிருந்து கொள்ளுப் பாட்டி வீட்டுக்கு புதன்கிழமை இரவு வந்தாராம். அப்போது, வீட்டில் நகை, பணம் எடுக்க முயன்றபோது மயக்க ஸ்பிரே அடித்து பாட்டியைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் அதே ஊரில் வசிக்கும் ராஜம்மாளின் மற்றொரு மகள் சாந்தி, ரராஜம்மாள் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது அவா் இறந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது அங்கிருந்து மோனீஸ் உள்ளிட்ட மூவரும் தப்பியோடினா். இதையடுத்து அருகே இருந்தவா்கள் மோனீஸ், பிரஜ்வால் ஆகிய இருவரையும் பிடித்தனா். வினய் தப்பியோடி தலைமறைவானாா். இருவரும் ஆம்பூா் கிராமிய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனா். அவரிடமிருந்து மயக்க ஸ்பிரே, கத்தி, பாட்டியின் ஒன்றரை சவரன் நகை ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com