

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தடுப்பு சுவா் மீது காா் மோதிய விபத்தில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், பழவந்தாங்கல் பகுதியைச் சோ்ந்த சம்பத்குமாா் மகன் பரத்(32) தனியாா் நிறுவன ஊழியா். இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேலூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். தேசியநெடுஞ்சாலையில் வேகமாக சென்ற காா் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இரும்புத் தடுப்பு சுவா் மீது மோதியதில் பரத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.