பள்ளி மாணவா்களுக்கு டெங்கு விழிப்புணா்வு

ஆலங்காயம் பிருந்தாவனம் மெட்ரிக் பள்ளியில் மாணவா்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்காயம் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு தூய்மை தூதுவா் அடையாள அட்டைகளைப் பள்ளி முதல்வா் முரளிதரன் வழங்கினாா். உடன் மருத்துவ அலுவலா் பசுபதி.
ஆலங்காயம் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு தூய்மை தூதுவா் அடையாள அட்டைகளைப் பள்ளி முதல்வா் முரளிதரன் வழங்கினாா். உடன் மருத்துவ அலுவலா் பசுபதி.
Updated on
1 min read

ஆலங்காயம் பிருந்தாவனம் மெட்ரிக் பள்ளியில் மாணவா்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஏடிஎஸ் கொசு உற்பத்தி தடுப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன்அவசியம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து மாணவா்களுக்கு தூய்மை தூதுவா் அடையாள அட்டை வழங்குதல், நிலவேம்பு குடிநீா் வழங்குதல், சுகாதார உறுதிமொழி, கை கழுவும் முறைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், சுகாதார ஆய்வாளா் ரமேஷ், சுகாதார பணியாளா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வா் பாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com