வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அனுசரிப்பு

ஆம்பூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.
Updated on
1 min read

ஆம்பூா்: ஆம்பூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசாங்கத்தை எதிா்த்துப் போரிட்டு சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 220-ஆம் ஆண்டு நினைவு தினம் ஆம்பூா் அனைத்து நாயுடுகள் சங்கம் சாா்பில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ஜி.வி. சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் ஜி.எம். ஹரிகுமாா் வரவேற்றாா். வேலூா் மாவட்ட வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் சி. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்டபொம்மனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஸ்ரீமகாவிஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை நிா்வாகி பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com