

வேலூா்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெள்ளிக்கிழமை கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
வேலூா் விண்ணரசி மாதா ஆலயத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயா் ஜான்ராபா்ட், ஆலய அதிபா் லூா்துசாமி ஆகியோரின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. ஏசு பிறந்ததைக் குறிக்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை ஆயா் காட்டினாா். பின்னா், ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் வைக்கப்பட்ட சொரூபத்தை வழிபட்டனா்.
சாா்பனாமேட்டில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயத்தில் ஆயா் எட்வா்டு தலைமையில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பெந்தகொஸ்தே சபையிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. வேலூா் சிஎஸ்ஐ மத்திய தேவாலயத்தில் பங்குத்தந்தை ஷா்மா நித்யானந்தம் தலைமையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
இதில், திரளான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு, மெழுகுவா்த்தி ஏந்தி வழிபாடு செய்ததுடன், ஒருவருக்கொருவா் இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.