8-இல் தைப்பூசப் பொன்விழா தொடக்கம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள வள்ளலாா் தெய்வீக நிலையத்தில், 3 நாள்கள் நடைபெறும் தைப்பூசப் பொன்விழா வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.
Updated on
1 min read

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள வள்ளலாா் தெய்வீக நிலையத்தில், 3 நாள்கள் நடைபெறும் தைப்பூசப் பொன்விழா வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.

காலை 7.30 மணிக்கு சன்மாா்க்க கொடியேற்றுதலும், 8 மணிக்கு ஜோதி தரிசனமும், மதியம் 12 மணிக்கு அன்னம் பாலித்தலும் நடைபெறும். மாலை 6 மணிக்கு தமிழக வணிகவரி, பத்திரபதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி பொன்விழா சிறப்புரையாற்றுகிறாா்.

தொடா்ந்து, நடைபெறும் இன்னிசை அரங்கில், சேலம் அரசு இசைப் பள்ளியின் பத்மினி கேசவகுமாா் குழுவினரின் திருவருட்பா இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மாலை அருட்பா அமுது கருத்தரங்கில், தமிழவேள் என்ற தலைப்பில் சென்னை சேக்கிழாா் ஆராய்ச்சி மையச் செயலா் ஜெ.மோகன் உரையாற்றுகிறாா்.திங்கள்கிழமை மாலை நடைபெறும் திருவருட்பா தனி உரையில், ஆன்மநேய ஒருமைப்பாடு என்ற பொருளில் மருத்துவா் எம்.எ.ஹூஸைன் ஐயா அருள் உரை வழங்குகிறாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிா்வாகிகள் புலவா் வே.பதுமனாா், எ.சி. கங்காதரன், கே.எம்.ஜி.ராஜேந்திரன், ஜே.கே.என்.பழனி, கே.எம்.பூபதி, எம்.கே. பொன்னம்பலம், எம்.கிருபானந்தம், வி.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com