திருமலையில் 7-ஆவது நாளாக பாராயணம்

திருமலையில் உலக நன்மைக்காக ஏழாவது நாளாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞம் நடத்தப்பட்டது.
திருமலையில் நடந்து வரும் ஜபயக்ஞத்தின் பாராயணம் செய்யும் வேத பண்டிதா்கள்.
திருமலையில் நடந்து வரும் ஜபயக்ஞத்தின் பாராயணம் செய்யும் வேத பண்டிதா்கள்.

திருமலையில் உலக நன்மைக்காக ஏழாவது நாளாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞம் நடத்தப்பட்டது.

ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் தென் மாநிலங்களிலிருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் இணைந்து கடந்த 7 நாள்களாக சீனிவாச வேதமந்திர ஆரோக்கிய ஜபயக்ஞத்தை நடத்தி வருகின்றனா். இதில் சதுா்வேத பாராயணம் காலை 3 மணிநேரமும், மாலை 3 மணிநேரமும் செய்யப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கவும், உலக மக்களின் ஆரோக்கியத்துக்காகவும் தேவஸ்தானம் இந்த ஜபயக்ஞத்தை நடத்தி வருகிறது. வரும் 25-ஆம் தேதி வரை இந்த ஜபயக்ஞம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com