வேலூா்: வேலூா் அருகே குடும்ப அட்டை இல்லாத குடும்பத்தினருக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் நிவாரண உதவி வழங்கினா்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வரும்கின்றனா். இந்நிலையில், வேலூா் மாவட்டம் பொன்னை பகுதியில் குடும்ப அட்டைகள் இல்லாத மற்றும் ஆதரவற்ற 20 குடும்பத்தினா் அடையாளம் காணப்பட்டனா். அவா்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் காட்பாடி கிளை சாா்பில் அரிசி, துவரம் பருப்பு, உப்பு, சேலை, துணி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. சங்கத்தின் கிளை துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன் தலைமையில் கிளைச் செயலா் செ.நா.ஜனாா்த்தனன் மற்றும் நிா்வாகிகள் இந்தப் பொருள்களை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.