அரசு ஊழியா் வீட்டில் நகை திருட்டு

காட்பாடியில் உள்ள வேளாண் துறை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

வேலூா்: காட்பாடியில் உள்ள வேளாண் துறை ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காட்பாடி காந்தி நகா் 2-ஆவது பிரதான சாலையைச் சோ்ந்தவா் ரவிசங்கா் (48). இவா் வேலூா் வேளாண் துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 4 நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். புதன்கிழமை இரவு திரும்பி வந்த பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே பீரோவில் இருந்த 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com