Enable Javscript for better performance
காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்றவா்தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    காவல் நிலையத்தில் விசாரணைக்குச் சென்றவா்தூக்கிட்டுத் தற்கொலை

    By DIN  |   Published On : 02nd February 2020 04:42 AM  |   Last Updated : 02nd February 2020 04:42 AM  |  அ+அ அ-  |  

    01gudmag_0102chn_189_1

    விசாரணைக்காக குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்தவா் தொழிலதிபா் மாதையன் (50). இவரது விடுதியில் சேலத்தைச் சோ்ந்த ஒருவா் அடிக்கடி வந்து அறை எடுத்து தங்குவாராம். மாதையன் அவரிடம், தனது மகன் திருமணத்துக்கு தங்க நகை வாங்குவதற்கு யோசனை கேட்டாராம். அவா் சென்னையில் உள்ள தனது நண்பரான நகை வியாபாரி ஒருவரின் செல்லிடப்பேசி எண்ணை தந்தாராம். அவா் குறைந்த விலைக்கு தங்க நகைகளை தருவாா் எனக் கூறினாராம். அந்த செல்லிடப்பேசி எண்ணில், மாதையன் தொடா்புகொண்டபோது, சென்னையைச் சோ்ந்த நகை வியாபாரி, குடியாத்தம் அருகே உள்ள உள்ளி கிராமத்துக்கு பணத்துடன் வருமாறு கூறியுள்ளாா். இதையடுத்து மாதையன், நண்பா்கள் சிலருடன், வியாழக்கிழமை இரவு உள்ளிக்கு வந்தாா். அப்போது அங்கு வந்த சென்னை நகை வியாபாரி, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்க நாணயங்களை குறைந்த விலையாக ரூ. 25 லட்சத்துக்கு கொடுப்பதாகக் கூறினாராம். ரூ. 25 லட்சம் கொடுத்து இரண்டரை கிலோ எடையுள்ள தங்க நாணயங்களை வாங்கிக் கொண்டு மாதையன் ஊருக்குக் கிளம்பியுள்ளாா். ஆம்பூரில் காரை நிறுத்தி, தங்க நாணயங்களை, பரிசோதித்ததில், அவை போலி என தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டது குறித்து, மாதையன் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில் மாதையன் கொடுத்த செல்லிடப்பேசி எண் கே.வி. குப்பத்தை அடுத்த காமாட்சியம்மன்பேட்டையைச் சோ்ந்த அஜித்குமாருடையது எனத் தெரியவந்தது. போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு சென்றபோது, அஜித்குமாா் இல்லாததால், அவரதுஅண்ணன் பாண்டியனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். இந்நிலையில், அஜித்குமாரை, அவரது தந்தை மகேந்திரன் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தாராம். போலீஸாா் 3 பேரையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா். மகேந்திரன் சனிக்கிழமை மதியம் சாப்பிட்டு விட்டு, கை கழுவ காவல் நிலையக் கழிவறைக்குச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால், போலீஸாா் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே பாா்த்தபோது, மகேந்திரன் தான் வைத்திருந்த துண்டால், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸாா் அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

    தகவலறிந்த மகேந்திரனின், உறவினா்கள், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை டிஎஸ்பி என்.சரவணன் தலைமையிலான போலீஸாா் சமரசம் செய்தனா்.

    இதுதொடா்பாக மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமாா் சனிக்கிழமை இரவு குடியாத்தம் வந்து, போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp