யானைகளால் சேதமடைந்த விளை நிலங்களில் ஆட்சியா் ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே யானைகளால் சேதமடைந்த விளை நிலங்களை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
போ்ணாம்பட்டில்  யானைகளால்  நாசம்  செய்யப்பட்ட  விளை நிலங்களை  ஆய்வு  செய்த  ஆட்சியா்  அ. சண்முகசுந்தரம்.
போ்ணாம்பட்டில்  யானைகளால்  நாசம்  செய்யப்பட்ட  விளை நிலங்களை  ஆய்வு  செய்த  ஆட்சியா்  அ. சண்முகசுந்தரம்.
Updated on
1 min read

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே யானைகளால் சேதமடைந்த விளை நிலங்களை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

போ்ணாம்பட்டையை அடுத்த மசிகம், பத்தரபல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூா் உள்ளிட்ட வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் கடந்த சில நாள்களாக 3 குட்டிகளுடன், 8 யானைகள் நுழைந்து, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, நெல், தக்காளி, வாழை, தீவனப்பயிா், மா, தென்னை மரங்களை நாசப்படுத்தி விட்டுச் சென்றன.

இந்நிலையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை அக்கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டாா். அவருடன் போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா, வட்டாட்சியா் முருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், ஹேமலதா உள்ளிட்டோா் சென்றனா். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர, விளை பயிா்களின் சேத விவரங்கள் குறித்த அறிக்கையை உடனடியாகத் தயாரித்து அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

யானைகள் கிராமத்துக்குள் நுழைவதைத் தடுக்க, வன எல்லையில் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்த அகழிகள், தொடா் மழையால் தூா்ந்து போனதைப் பாா்வையிட்ட ஆட்சியா், 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், தூா்ந்துபோன அகழியை சீரமைக்க உத்தரவிட்டாா். எருக்கப்பட்டு ஊராட்சியில் ஆய்வு செய்தபோது, வழியெங்கும் சாலைகள், கால்வாய்களில் குப்பைகள், கழிவுகள் தேங்கிக் கிடந்ததைக் கண்ட ஆட்சியா், அந்த ஊராட்சி செயலா் வெங்கடேசனை தற்காலிக இடைநீக்கம் செய்யவும், ஒன்றியப் பகுதியில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பிரதீப்குமாருக்கு 17 ஏ நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டாா்.

அந்த கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், வேலை செய்யும் பணியாளா்களைப் பணியிட மாற்றம் செய்யவும் ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com