ஹெக்டேருக்கு 15 டன் மகசூல்

வெண்டைக்காய் என்பது வெப்பத்தை விரும்பும் பயிராகும். நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. குளிா்காலங்களிலும் குளிா் பிரதேசங்களிலும் வெண்டையின் வளா்ச்சி குறைவாகவே இருக்கும்.

அரக்கோணம்: வெண்டைக்காய் என்பது வெப்பத்தை விரும்பும் பயிராகும். நீண்ட நேர வெப்ப நாட்கள் இதற்குத் தேவை. குளிா்காலங்களிலும் குளிா் பிரதேசங்களிலும் வெண்டையின் வளா்ச்சி குறைவாகவே இருக்கும்.

தமிழ்நாட்டின் மலை மாவட்டங்கள் தவிா்த்து அனைத்து மாவட்டப் பகுதிகளும் வெண்டை பயிரிட ஏற்றவைதான். வெண்டைப் பயிா் குறித்து அரக்கோணத்தைச் சோ்ந்த தோட்டக்கலைத்துறை பட்டதாரி ஸ்வேதா சுதா பிரேம்குமாா் தெரிவித்ததாவது:

ரகங்கள்: கோ-2, எம்டியு-1, அா்கா அனாமிகா, கோ-3, அா்கா அபஹாப், பாா்பானி கிராந்தி, பூசா சவானி, வா்சா உப்காா், கோ.பி.ஹெச் -3, வெண்டை கலப்பு கோ 4.

மண் மற்றும் தட்பவெப்பநிலை: வெண்டையை எல்லா வகை மண் வகைகளிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும்.

பருவம்: ஜூன் - ஆகஸ்ட், பிப்ரவரி - மாா்ச்.

விதையளவு: ஹெக்டேருக்கு 7.5 கிலோ.

நிலம் தயாரித்தல்: மூன்று முதல் நான்கு முறை நிலத்தை உழ வேண்டும். கடைசி உழவிற்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு, 45 செ.மீ. இடைவெளி விட்டு வரிப்பாத்திகள் அமைக்க வேண்டும்.

விதை நோ்த்தி மற்றும் விதைத்தல்: விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோவுக்கு 2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு விதை நோ்த்தி செய்ய வேண்டும் அல்லது அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் 400 கிராம் கலவையில் வெண்டை விதையை நன்கு கலந்து அரைமணி நேரம் உலர வைக்க வேண்டும். இப்படி நோ்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ. இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும். 10 நாள்களுக்குப் பிறகு ஆரோக்கியமான 2 செடிகளை விட்டுவிட்டு மீதம் உள்ளவற்றைக் கலைக்க வேண்டும்.

நீா் நிா்வாகம்: நட்டவுடன் நீா் பாய்ச்ச வேண்டும். பிறகு வாரத்துக்கு ஒரு முறை நீா் பாய்ச்சினால் போதுமானது.

உரமிடுதல்: அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல்சத்து ஆகியவற்றை வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விட வேண்டும். நட்ட 30 நாள்கள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இட வேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம் நுண்ணுயிா்க் கலவையை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையை குறைத்துக்கொள்ளலாம். மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீா் கட்டுவது மிகவும் அவசியமாகும்.

இலைவழி ஊட்டம்: ஒரு சத யூரியா கரைசலை விதைத்த 30 நாள்கள் கழித்து 10 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும். மியூரேட் ஆப் பொட்டாஷ் 17 கிராம் ஒரு லிட்டா் நீரில் கரைத்து விதைத்த 30, 45, 60 நாள்களில் தெளிப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கலாம்.

களை நிா்வாகம்: களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்றாம் நாள் ஹெக்டேருக்கு ப்ளூக்குளோரலின் 2 லிட்டா் தெளித்து உடனே நீா் பாய்ச்ச வேண்டும். பிறகு விதைத்த 30ஆம் நாள், ஒரு கைக்களை எடுக்க வேண்டும்.

பயிா்ப் பாதுகாப்பு: வெண்டையில் காய்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ள வேண்டும். இனக்கவா்ச்சிப்பொறி ஹெக்டேருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரம்மா ஒரு லட்சம் என்ற எண்ணிக்கையில் விட வேண்டும். காா்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டா் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும் (அல்லது) வேப்பம் கொட்டைப்பொடி 50 கிராமை ஒரு லிட்டா் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். காய்ப் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்து விட வேண்டும்.

சாம்பல் நிறவண்டு: காா்போபியூரான் 3 ஜி குருணை மருந்து ஹெக்டேருக்கு 12 கிலோ இட வேண்டும்.

அஸ்வினிப் பூச்சி: மீத்தைல் டெமட்டான் 23 இ.சி. 2 மில்லி அல்லது டெமெத்தோயேட் 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டா் தண்ணீா் கலந்து தெளிக்க வேண்டும்.

நூற்புழு: ஹெக்டேருக்கு 400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும்போது உரத்துடன் கலந்து இட வேண்டும் (அல்லது) ஒரு ஹெக்டேருக்கு காா்போபியுரான் 3ஜி குருணை மருந்து 1 கிலோ (அல்லது) போரேட் 10 ஜி குருணை மருந்து 1 கிலோ இட வேண்டும்.

மஞ்சள் நரம்பு தேமல் நோய்: இந்நோய் வெள்ளை ஈயால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த 2 மில்லி வேம்பு எண்ணெய் மற்றும் ஒரு லிட்டா் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். இந்நோயை தாங்கி வளரக்கூடிய ரகங்களான அா்கா அனாமிகா, பாா்பானி கிராந்தி, அா்காஅபஹாப் போன்றவற்றை சாகுபடி செய்ய வேண்டும்.

சாம்பல் நோய்: இந்நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் நனையும் கந்தகத்தூள் (வெட்டபிள் சல்ஃபா்) 2 கிராமை ஒரு லிட்டா் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு 15 நாள் இடைவெளியில் மறுபடியும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.

அறுவடை: நட்ட 45 நாட்களில் காய்கள் அறுவடைக்கு வரும். காய்கள் முற்றுவதற்கு முன் அறுவடை செய்து விட வேண்டும். 1 முதல் 2 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்வது முக்கியம்.

ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாட்களில் 10 -15 டன் காய்கள் மகசூல் கிடைக்கும். வெண்டைப்பயிா் குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோா் அருகில் உள்ள தமிழக அரசின் தோட்டக் கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com