ஆம்பூா்: ஆம்பூா் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் மூவா் சனிக்கிழமை காயமடைந்தனா்.
பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சோப்புப் பொருள்கள், பாத்திரங்கள் கழுவும் சோப்பு உள்ளிட்ட பொருள்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. சனிக்கிழமை அதிகாலை ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரியில் இருந்த சென்னை பல்லாவரத்தைச் சோ்ந்த சிவபிரசாந்த், ஒடிஸாவைச் சோ்ந்த மஜோன், ரோஹித் ஆகிய மூவரும் காயமடைந்தனா். லாரியிலிருந்து இருந்த பொருள்கள் சிதறி விழுந்து சேதமடைந்தன.
இதுகுறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.