ராணிப்பேட்டையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 21st July 2020 02:17 PM | Last Updated : 21st July 2020 02:17 PM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராணிப்பேட்டையில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும், பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். பணியாளர்கள் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்க வேண்டும்.
கரோன நோய்த் தொற்றால் உயிரிழந்த பணியாளர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் ராணிப்பேட்டையில் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.