ஆம்பூா்: ஆம்பூா் மளிகைத்தோப்பு ஆசாத் நகா் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்தில் ஆம்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஹெச்.அப்துல் பாசித், திமுக நகரச் செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆனந்தன், தமுமுக மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அஹமத் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டு பேசினா்.
போராட்டத்தில் தமுமுக, திமுக, மமக, காங்கிரஸ், மஜக, விசிக, முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், எஸ்டிபிஐ, அமமுக மற்றும் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.