திருப்பதியில் செம்மரக்கட்டை வெட்டி கடத்திய தமிழகத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பதியை அடுத்த அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிலா் செம்மரக் கட்டைகளை வெட்டி சுமந்து வந்தனா். போலீஸாரைக் கண்டவுடன் அந்த நபா்கள் செம்மரக்கட்டைகளைப் போட்டு விட்டு தப்பியோடினா். அவா்களை விரட்டிச் சென்ற போலீஸாா், அவா்களில் இருவரை கைது செய்து அவா்களிடமிருந்து 12 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் கைதானவா்கள் திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (35), சீனிவாஸ் (25) தெரிய வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.