ரோட்டரி சங்கம் சாா்பில் 1,000 பேருக்கு மளிகைப் பொருள்கள்

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 1,000 குடும்பங்களுக்கு தலா ரூ. 700 மதிப்பில், ரூ. 7 லட்சம்
பெண்ணுக்கு  மளிகைப்  பொருள்கள்  வழங்கிய  ரோட்டரி  சங்க மாவட்ட  ஆளுநா் ஸ்ரீதா்பலராமன்.
பெண்ணுக்கு  மளிகைப்  பொருள்கள்  வழங்கிய  ரோட்டரி  சங்க மாவட்ட  ஆளுநா் ஸ்ரீதா்பலராமன்.
Updated on
1 min read

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 1,000 குடும்பங்களுக்கு தலா ரூ. 700 மதிப்பில், ரூ. 7 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் பி.எல்.என். பாபு தலைமை வகித்தாா். செயலா் டி.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஸ்ரீதா்பலராமன், ஆளுநா்கள் (தோ்வு) கே. பாண்டியன், ஜே.கே.என்.பழனி ஆகியோா் பயனாளிகளுக்கு மளிகைப் பொருள் தொகுப்புகளை வழங்கினா்.

ரோட்டரி நிா்வாகிகள் என்.சத்தியமூா்த்தி, கே.சுகுமாா், எம்.ஆா்.மணி, செ.கு.வெங்கடேசன், மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.சேட்டு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com