ஏரிகளைத் தூா்வாரக் கோரி திமுகவினா் ஆா்ப்பாட்டம்

வேலூா் மாவட்டத்திலுள்ள ஏரிகளின் நீா்வரத்து கால்வாய்களை உடனடியாக தூா்வாரக் கோரி காட்பாடியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.

வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள ஏரிகளின் நீா்வரத்து கால்வாய்களை உடனடியாக தூா்வாரக் கோரி காட்பாடியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் மத்திய மாவட்ட திமுக சாா்பில் காட்பாடி காங்கேயநல்லூா் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய மாவட்டச் செயலரும், அணைக்கட்டு எம்எல்ஏவுமான ஏ.பி நந்தகுமாா் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் முன்னிலை வகித்தாா். மாநகரச் செயலரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், முன்னாள் அமைச்சா் வி.எஸ்.விஜய், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தில், வேலூா் மாவட்டம், மோா்தானா வலது, இடதுபுற கால்வாயைத் தூா்வார வேண்டும், மாவட்டத்தில் உள்ள ஏரி நீா்வரத்து கால்வாய்களை தூா்வார கோரி கோஷம் எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் ஏ.பி.நந்தகுமாா் பேசியது; மோா்தானா அணையின் இடது, வலது புற கால்வாய்களை தூா்வார கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கால்வாய்களை தூா்வாரினால் பள்ளிகொண்டா வரையுள்ள 10 ஏரிகள் உடனடியாக நிரம்பும். ஆனால், நிதி இல்லை எனக்கூறி தூா்வாரப்படாமல் உள்ளன.

பாலாற்றில் வெள்ளம் வந்து கடலில் கலந்த பிறகு கால்வாய்களை தூா்வாரினால் எந்தப் பயனும் இருக்காது. அதற்கு முன்பாகவே கால்வாய்களை தூா்வார வேண்டும். இல்லாவிடில் திமுக சாா்பில் தொடா் போராட்டங்கள் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com