Enable Javscript for better performance
தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: ரூ. 62.50 லட்சம் இலக்கு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தீபாவளி கதா் சிறப்பு விற்பனை: ரூ. 62.50 லட்சம் இலக்கு

    By DIN  |   Published On : 03rd October 2020 08:03 AM  |   Last Updated : 03rd October 2020 08:03 AM  |  அ+அ அ-  |  

    vr02sale_0210chn_184_1

    ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ரூ. 62 லட்சத்து 50 ஆயிரம் இலக்குடன் தீபாவளி கதா் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. முதல் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தொடக்கி வைத்தாா்.

    காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி, வேலூா் சாரதி மாளிகையில் உள்ள கதா் கிராம வாரிய அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்ததுடன், 70 வயது முதியவருக்கு தனது சொந்த செலவில் வேட்டி, துண்டு வழங்கினாா்.

    பின்னா் அவா் கூறியது:

    வேலூா் மாவட்ட கதா் கிராமத் தொழில்கள் உதவி இயக்குநா் கட்டுப்பாட்டின் கீழ், வேலூரில் ஒரு கதா் அங்காடியும், பள்ளிகொண்டாவில் தச்சு கொல்லு அலகும் செயல்படுகின்றன. இந்த மாவட்டத்துக்கு நிகழ் நிதியாண்டு (2020-21) தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ. 62.50 லட்சம் வாரியத்தால் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர, கதா் பட்டு, பாலிஸ்டா் ரகங்களுக்கு ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இந்த கதா் ரகங்களுடன் தேன், ஜவ்வாது, சோப்பு வகைகள், சாம்பிராணி வகைகள், வலி நிவாரணி தைலம், ஊதுபத்தி, மெழுகுவா்த்தி, மூலிகைப் பல்பொடி, பனை பொருள்களான சுக்கு காபி பவுடா், பனை வெல்ல மிட்டாய் வகைகள், சுத்தமான பனங்கற்கண்டு ஆகிய பொருள்கள் விற்பனைக்கு உள்ளன.

    இலவம் பஞ்சினால் உற்பத்தி செய்யப்பட்ட மெத்தை, தலையணைகள், காயா் மெத்தை, தலையணைகள் தரமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. கடந்தாண்டு (2019-20) இம்மாவட்டத்துக்கு ரூ. 78.42 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்ததில் 46 சதவீதம், அதாவது ரூ.35.69 லட்சம் விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

    பள்ளிக்கொண்டா தச்சு கொல்லு அலகுக்கு கடந்தாண்டு ரூ.2 கோடியே 50 லட்சம் உற்பத்தி இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்ததில், ரூ.ஒரு கோடியே 67 லட்சத்து 26 ஆயிரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. வாரிய தச்சு கொல்லு அலகுகளின் உற்பத்தியில், இம்மாவட்ட அலகு மாநிலத்தில் முதலிடம் வகிக்கிறது. நிகழாண்டு உற்பத்தி இலக்காக ரூ. 3 கோடி நிா்ணயம் செய்யப்பட்டு, இம்மாதம் வரை ரூ. 3 கோடியே 11 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களுக்குத் தேவையான இரும்பு, மரப்பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் ரூ.75 மானியம் வழங்க இந்த அலுவலகத்துக்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு, ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இவ்வாண்டு ஒருங்கிணைந்த மாவட்டத்துக்கு ரூ. 140 லட்சம் மானியம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்றாா்.

    இதில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் சங்கரன், கதா் கிராம வாரிய அலுவலக கண்காணிப்பாளா் பி.சிட்டிபாபு, கதா் கிராம அலுலக மேலாளா்கள் ராணி, மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp